

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை அருகே உள்ள கருக்கம்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் சுமார் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் மிதப்பதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வேலூர் போலீசார் அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இறந்த அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்து கிடந்த நபர் நீல நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட், மஞ்சள் நிறத்திலான சட்டை அணிந்திருந்தார். அவரது கையில் மஞ்சள் நிற கயிறும், வலது கையில் பச்சை, வெள்ளை கலந்த நிறத்திலான மோதிரம் அணிந்திருந்தார்.