search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல்லில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
    X

    நாமக்கல்லில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

    • நாமக்கல் கோட்ட அள விலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந் தேதி (செவ் வாய்க்கிழமை) நடக்கிறது.
    • அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடக்கவுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்ட அள விலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந் தேதி (செவ் வாய்க்கிழமை) நடக்கிறது.

    இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது: -

    நாமக்கல் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாமக்கல் உட்கோட்டத் தில் உள்ள நாமக்கல், மோகனூர், சேந்தமங்கலம், ராசிபுரம் மற்றும் கொல்லிமலை ஆகிய அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடக்கவுள்ளது. நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், வருகிற 21-ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங் கள், வேளாண் இடுபொருட்கள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்ப டுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன், தங்களது கோரிக்கைகளையும் மனுக்க ளாக அளித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×