search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    5 மாதங்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்கொல்லிமலையில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
    X

    5 மாதங்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்கொல்லிமலையில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

    • கொல்லிமலை வளப்பூர்நாடு ஊராட்சிக்குட்பட்ட அறப்பளீஸ்வரர் கோவில் அருகே சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இந்த பகுதிக்கு கடந்த 5 மாதங்களாக ஊராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீர் முறையாக விநியோகம் செய்யவில்லை என தெரிகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர்நாடு ஊராட்சிக்குட்பட்ட அறப்பளீஸ்வரர் கோவில் அருகே சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதிக்கு கடந்த 5 மாதங்களாக ஊராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீர் முறையாக விநியோகம் செய்யவில்லை என தெரிகிறது. இந்நிலையில் குடிநீருக்காக அப்பகுதி மக்கள் ஆற்றுத் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.

    ஊராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யாததால் மிகவும் சிரமாக இருப்பதாகவும், குடிநீர் முறையாக வழங்க வேண்டும் என ஊராட்சி தலைவர், அலுவலர்களிடம் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், இன்று அறப்பளீஸ்வரர் கோவில் அருகே காலி குடங்கள், சிண்டெக்ஸ் டேங்களை சாலையில் வைத்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்ட பெண்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் விநி யோகம் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தன்பேரில் அனைவரும் மறியலை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×