என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்திவேலூர் சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு
    X

    பரமத்திவேலூர் சந்தையில் நாட்டுக்கோழி விலை சரிவு

    • நாமக்கல் மாவட்டம பரமத்திவேலூரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை நடைபெற்று வருகிறது.
    • பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக் கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம பரமத்திவேலூரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நாட்டுக்கோழி சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு பரமத்தி வேலூர், மோகனூர், கரூர், பாளையம், நாமக்கல், ஜேடர்பாளையம், சோழசிராமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான நாட்டுக் கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர்.

    இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் நாட்டுக் கோழிகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்து நாட்டு கோழிகளை வாங்கிச் செல்கின்றனர்.

    நேற்று நடைபெற்ற சந்தைக்கு பெருவடை, கீரி, கடகநாத், அசில், மயில், காகம், கருங்கண் கருங்காலி, கிரிராஜா உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுக்கோழிகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனர்.

    கடந்த வாரம், தரமான நாட்டுக் கோழிகள் கிலோ ஒன்று ரூ.400 வரையிலும், பண்ணைகளில் வளர்க்கப் படும் நாட்டுக் கோழிகள் கிலோ ரூ.300 வரையிலும் விற்பனையானது.

    நேற்று நடைபெற்ற ஏலத்தில் நாட்டுக்கோழிகள் கிலோ ரூ.350 வரையிலும், பண்ணை நாட்டுக்கோழிகள் ரூ.250 வரையிலும் விற்பனையானது. சண்டைக்கோழிகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையானது.

    வரத்து அதிகரித்ததால் நாட்டுக்கோழிகள் விலை சரிவடைந்ததாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×