search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இயற்கை விவசாயத்தில் ஈடுபட கலெக்டர் வேண்டுகோள்
    X

    இயற்கை விவசாயத்தில் ஈடுபட கலெக்டர் வேண்டுகோள்

    • நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மையும் அதனை சார்ந்த தொழில்களும் முக்கிய பங்கு வகிக்கிறது.
    • மக்கள் தொகையில் 65 முதல் 75 சதவீதம் பேர் விவ சாயத்தை தங்கள் வாழ்வா தாரமாக கொண்டுள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மையும் அதனை சார்ந்த தொழில்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்கள் தொகையில் 65 முதல் 75 சதவீதம் பேர் விவ சாயத்தை தங்கள் வாழ்வா தாரமாக கொண்டுள்ளனர்.

    மேலும் வளர்ந்து வரும் மக்கள் தெகைக்கு தேவை யான உணவு மற்றும் உணவுப் பொருட்களின் பாதுகாப்பினை உறுதிப் படுத்திட இயற்கை விவசா யம் செய்து, நஞ்சில்லா உணவு பொருட்களை உற்பத்தி செய்வதில் பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மிக முக்கிய அங்கமாக விளங்கு கிறது.

    வேதியியல் பொருட் களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் மண்ணும் நீரும் நச்சுத் தன்மை அடைந்து மனித வாழ்வு நலிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்ப தால், இதனை தவிர்க்கும் விதமாக இயற்கையான எருவைப் பயன்படுத்தி ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் இல்லாமல் வேளாண்மை செய்யும் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு அங்கக வேளாண்மை கொள்கை அண்மையில் வெளியிட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகள், கிராமப்புற இளைஞர்கள், பண்ணை மகளிர், மாணவர்களி டையே போதிய விழிப்பு ணர்வு ஏற்படுத்துதல் மற்றும் அங்க வேளாண் மையை ஊக்குவிக்க மாவட்ட மற்றும் வட்டார அளவில் விவசாயிகளுடன் கூடிய குழுக்கள் அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் அங்கக வேளாண்மையை ஊக்கு விக்கும் வகையில், பாரம் பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல் படுத்த திட்டமிடப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்திற்கு 15 வட்டா ரங்களில் 400 எக்டர் பரப்பளவில் 20 தொகுப்பு கள் உருவாக்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அங்கக சான்றிதழ் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், சான்று கட்டணமான ெஹக்டருக்கு ரூ. 2,000 வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தின் கீழ் 1 எக்டருக்கு குறைவாக உள்ள விவசாயிகளும் இணைந்து பயன்பெறலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் விளைவிக்கப்படும் உணவு பொருள்கள் மனித உடலுக்கு ஊறு விளை விக்காத காரணத்தினால் அதிக அளவில் மக்களிடம் வரவேற்பையும் அதிக லாபத்தையும் ஈட்டித் தரும் திட்டமாகும்.

    இத்திட்டம் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவல கத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கூறியுள்ளார்.

    Next Story
    ×