search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பாக செயல்பட்ட 2 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம்
    X

    சிறப்பாக செயல்பட்ட 2 போலீசாருக்கு முதல்-அமைச்சர் பதக்கம்

    • சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள், போலீசாரை ஊக்கு விக்கும் வகையில், முதல்-அமைச்சர் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என, அறிவித்தார்.
    • உயர் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, முதல்-அமைச்சரின் பதக்கம் வழங்க, தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    நாமக்கல்:

    தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், சட்டசபையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானிய கோரிக்கையின்போது, சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையா கவும் உழைக்கும் அதிகாரி கள், போலீசாரை ஊக்கு விக்கும் வகையில், முதல்-அமைச்சர் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என, அறிவித்தார்.

    2023-ம் ஆண்டு, சர்வ தேச போதை ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தை யொட்டி, உயர் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, முதல்-அமைச்சரின் பதக்கம் வழங்க, தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாரா யணன், தேனி எஸ்.பி. டோங்கரே பிரவின் உமேஷ், சேலம் சப்-டிவிஷன் ரெயில்வே டி.எஸ்.பி. குணசேகரன், நாமக்கல் எஸ்.ஐ. முருகன், புதுச்சத்தி ரம் போலீஸ் குமார் ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதன் முறையாக மாநில அளவிலான விருது பட்டி யலில், நாமக்கல் மாவட் டத்தை சேர்ந்த எஸ்.ஐ., மற்றும் போலீஸ் என 2 பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    முதல்-அமைச்சர் பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ., முருகன், போலீஸ் குமார் ஆகியோருக்கு, போலீஸ் உயர் அதிகாரிகள், சக போலீசார் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×