search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்ககிரியில் கள்ளச்சாராய தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    நிகழ்ச்சியில் சங்ககிரி கோட்ட கலால் தாசில்தார் வேலாயுதம் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    சங்ககிரியில் கள்ளச்சாராய தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • சேலம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு சங்ககிரி கோட்ட கலால் தாசில்தார் வேலாயுதம் தலைமை வகித்தார். கலால் வருவாய் ஆய்வாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.

    சங்ககிரி:

    சங்ககிரியில், சேலம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்ககிரி கோட்ட கலால் தாசில்தார் வேலாயுதம் தலைமை வகித்தார். கலால் வருவாய் ஆய்வாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில், கிராம நிர்வாக அலுவலர்கள் சதீஷ் பிரபு (சங்ககிரி), சண்முகம் (சின்னாக்கவுண்டனூர்), கிராம உதவியாளர்கள் தீனதயாளன், சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம், திருச்செங்கோடு ரோடு உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.

    Next Story
    ×