search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எருமப்பட்டி அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை
    X

    எருமப்பட்டி அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை

    • சுகுமார் (வயது 29). டிப்ளமோ படித்து விட்டு மேஸ்திரி வேலை செய்து வந்தார்.
    • கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்த சுகுமார் திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    எருமப்பட்டி:

    எருமப்பட்டி அருகே உள்ள வாழவந்தி கிழக்கு வீதியை சேர்ந்தவர் மலையாளம். இவருடைய மகன் சுகுமார் (வயது 29). டிப்ளமோ படித்து விட்டு மேஸ்திரி வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி மனம் நொந்து பேசுவதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி வீட்டில் இருந்த சுகுமார் திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். அப்போது வீட்டின் வெளியே இருந்த அவருடைய தம்பி பிரகாஷ், பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சுகுமாரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×