

பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கவுண்டிபாளையம் அருகே காளியப்பனூர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன்( 44). லாரி டிரைவர்.
இந்நிலையில் தியாகராஜன் கடந்த 5 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சரியாகவில்லை. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது விரக்தியில் இருந்த தியாகராஜன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
அப்போது அங்கு வந்த அவரது மகன் தந்தை தூக்கு போட்டு இருப்பதை பார்த்து சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்து தியாகராஜன் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் தியாகராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் தியாகராஜனின் மனைவி ஜெயமணி( 39) நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.