search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் கைது
    X

    ஆட்டோ டிரைவர் உள்பட 4 பேர் கைது

    • மனோஜ் (21). இவர் கடந்த 22-ந் தேதி தனது ஆட்டோவில் மங்களமேடு காலனி வழியாக சென்று கொண்டிருந்தார்.
    • மாயவனுக்கும், மனோஜூக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மங்களமேடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் மனோஜ் (21). இவர் கடந்த 22-ந் தேதி தனது ஆட்டோவில் மங்களமேடு காலனி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மாயவன் (54) என்பவர் இந்த வழியாக ஏன் வந்தாய் என கேட்டுள்ளார். இதில் மாயவனுக்கும், மனோஜூக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றவே மனோஜ் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (18), கொமராபாளையத்தை சேர்ந்த தீபன்ராஜ் (28), குப்புச்சிபாளையத்தை சேர்ந்த சதீஷ் (32) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 5 பேருடன் சேர்ந்து மாயவனையும் அவருக்கு ஆதரவாக தட்டிக் கேட்ட கிருஷ்ணன் (42), வரதம்மாள்(60), ராசாயி (60) ஆகியோரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 4 பேரும் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இச்சம்பவம் குறித்து கிருஷ்ணன் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணன், அவரது உறவினர்களை தாக்கிய மனோஜ், ஈஸ்வரன், தீபன்ராஜ், சதீஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த தகராறில் காயமடைந்து, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுவன் அங்கிருந்து மாயமாகி விடடார். தலைமறைவான அந்த சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×