search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமாரபாளையத்தில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
    X

    குமாரபாளையத்தில் லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

    • போலி லாட்டரி சீட்டு விற்பனை பல இடங்களில் நடப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா, முருகேசன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்பனை பல இடங்களில் நடப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தியா, முருகேசன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் பள்ளிபாளையம் சாலை சத்தியநாராயண மருத்துவமனை பகுதியில் வெள்ளை சீட்டில் சில எண்களை எழுதி வெளி மாநில லாட்டரி சீட்டு என 3 பேர் விற்றுக்கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கையும், களவுமாக பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் குமாரபாளையத்தை சேர்ந்த அங்கப்பராஜ் (43), ராமச்சந்திரன் (33), மணிகண்டன் (30) என்பது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×