search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வஸ்திரங்கள் ஏலம்
    X

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் வஸ்திரங்கள் ஏலம்

    • நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர், நாமகிரித் தாயார் கோவில் உள்ளது.
    • குறிப்பிட்ட மாத இடைவெளியில் கோவில் நிர்வாகத்தினர் சார்பில் ஏலம் விடப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர், நாமகிரித் தாயார் கோவில் உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள், இங்கு இருக்கும் நாமகிரித்தாயார் , லட்சுமி நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயருக்கு நேர்த்திக் கடனாக வேஷ்டி, புடவைகள் சாற்றுவது வழக்கம்.

    அந்த வஸ்திரங்களை குறிப்பிட்ட மாத இடைவெளியில் கோவில் நிர்வாகத்தினர் சார்பில் ஏலம் விடப்படுகிறது. அதன்படி இன்று நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் வஸ்திரங்கள் ஏலம் நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று தங்களுக்கு தேவையான பொருட்களை ஏலம் எடுத்தனர்.

    Next Story
    ×