ராசிபுரத்தில் போலீஸ் அணிவகுப்பு

ராசிபுரத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
கொடி அணிவகுப்பு நடத்திய போலீசார்.
கொடி அணிவகுப்பு நடத்திய போலீசார்.
Published on

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறை சாா்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பிற்கு காவல் துணை கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். 

அணிவகுப்பில் ராசிபுரம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ஜமுனாதேவி, போக்குவரத்து ஆய்வாளா் வெங்கடாசலம், காவல் உதவி ஆய்வாளா் தங்கம், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் குணசிங், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல், வெண்ணந்தூா் காவல்துறை சாா்பில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் வெண்ணந்தூா் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி தலைமை வகித்தாா். அணிவகுப்பில் பங்கேற்ற காவல்துறையினா் வெண்ணந்தூா் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com