

.நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு தொழில் நிறுவனங்கள் தங்களது ஒருங்கிணைந்த ஆண்டறிக்கைகளை இணையத்தின் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.
நேரடியாக ஆண்டறிக்கைகள் சமர்ப் பிப்பதை தவிர்க்க வேண்டும். ஆண்டறிக்கைகளை உரிய காலத்திற்குள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து துறை ரீதியான நடவடிக்கையைத் தவிர்த்து கொள்ளலாம் என்று நாமக்கல் தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தெரிவித்து உள்ளார்.