search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜை நடைபெற்றது.

    வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

    • கீழ்வேளூர் அருகே சாட்டியகுடியில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • லட்சுமி ஹோமம், ரக்சா பந்தனத்துடன் யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணா ஹுதி நடைபெ ற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே சாட்டியகுடியில் உள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன், கணபதிஹோமம் முதல் கால யாகசாலை பூஜை நடைப்பெற்றது.

    அதனை த்தொடர்ந்து வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் மற்றும் இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. லட்சுமி ஹோமம், ரக்சா பந்தனத்துடன் யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணா ஹுதி நடைபெ ற்றது.

    தொடர்ந்து மேளதா ளங்கள் முழங்க, சிவாசாரியார்கள் கடத்தை சுமந்து கோவிலை வலம் வந்து வலம்புரி விநாயகர் கோவில் கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×