பாரம்பரிய உணவு திருவிழா

கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் பள்ளியில் அங்கன்வாடி பணியாளர்களின் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.
அங்கன்வாடி பணியாளர்களின் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.
அங்கன்வாடி பணியாளர்களின் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது.
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் கீழ்வே ளூர் அஞ்சுவட்டத் தம்மன் உயர்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.

குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பவானி தலைமையில் நடை பெற்ற விழாவில் அங்கன் வாடி பணியாளர்கள் கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, போன்ற பாரம்பரிய சிறுதானியங்களில் செய்த இனிப்பு வகைகள், கார வகைகள், பிரியாணி, கூழ் போன்ற அனைத்து விதமான உணவு பண்டங் களைசமை த்து மாணவிகளுக்கு வழங்கினர்.

மேலும் சிறுதானிய உணவுகளின் சத்து மற்றும் நன்மைகளை மாணவிக ளுக்கு எடுத்துரைத்தனர். மேலும் காய்கறிகளைக் கொண்டு விலங்குகள், சிலைகள், பூக்களை வடிவ மைத்து காட்சி படுத்திருந் தனர். 

குழந்தை வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப் பாளர் பூர்ணியா, வட்டார திட்ட உதவியாளர் அருண் குமார், அஞ்சுவட்டத்தம்மன் மகளிர் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை மீனாட் சி, மேற்பார்வையாளர்கள் ஜெயலெட்சுமி, பிரேமநாயகி, வேதராண்யம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சௌமியா மற்றும் கீழ்வே ளூர் ஒன்றிய அனைத்து கிராம அங்கன் வாடி பணியாளர்கள், அஞ்சுவட் டத்தம்மன் மகளிர் அரசு உயர் நிலைப்பள்ளி ஆசிரி யைகள், மாணவிகள் கலந் துக் கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com