வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர சுவாமி&மனோன்மணி அம்மாள் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலித்த சந்திரசேகர சுவாமி-மனோன்மணி அம்மாள்.
ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலித்த சந்திரசேகர சுவாமி-மனோன்மணி அம்மாள்.
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யேஸ்வரர் கோயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான காட்சி கொடுத்த தலம். இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு 29.1.22 அன்று மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தேர்திருவிழா, தெப்பதிருவிழா, திருக்கதவு திறக்க அடைக்க பாடும் நிகழ்ச்சி என விழாக்கள் நடந்து முடிந்த நிலையில் நேற்று ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

இதில் ஸ்தலத்தார்கள் கயிலைமணி வேதரத்னம், கேடிலியப்பன், யாழ்பாணம் வரணீ ஆதினம் பண்டார சந்நிதி, நகராட்சி பொறியாளர் மனோகரன், காலபைரவர் வழிபாட்டு குழு தலைவர் தம்புசாமி உட்பட ஏராளமான பக்தர்கள், உபயதாரர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

கோவில் ஆதீன வித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசையும், ஓதுவாமூர்த்தி பரஞ்சோதி முனிவரின் தேவார இன்னிசையும் நடந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com