சேதமடைந்த அங்காடி கட்டிடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருமருகல் அருகே சேதமடைந்த அங்காடி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்துள்ள அங்காடி கட்டிடம்.
சேதமடைந்துள்ள அங்காடி கட்டிடம்.
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியம் காரையூர் ஊராட்சியில் சுமார்450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 

இந்த ஊராட்சியில் கங்களாஞ்சேரி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்-திற்கு உட்பட்ட சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அங்காடி கட்டிடம் உள்ளது. 

இந்த கட்டிடம் சுமார் 1 ஆண்டுக்கு மேல் எந்தவித பராமரிப்பும் இன்றி தரைகளில் உள்ள காரைகள் பெயர்ந்தும் கட்டிடம் முழுவதும் சேதமடைந்து உள்ளது.இதனால் இதற்கு மாற்றாக அருகில் உள்ள

ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் 1 ஆண்டுக்கு மேலாக தற்காலிகமாக அங்காடி செயல்பட்டு வருகிறது.இந்த தற்காலிக கட்டிடம் இருப்பதால் பழைய கட்டிடத்தை புதுபிக்க எவ்வித நடவடிக்கையும்

எடுக்காமல் உள்ளது எனவும் இதனால் ஊராட்சி சேவை மையம் மூடக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார்

அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்களின் அவதியை புரிந்து உடன் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரியும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com