நாகை - திருச்சி ரெயில் இன்று முதல் விரைவு ரெயிலாக இயக்கம்

நாகை - திருச்சி பயணிகள் ரெயில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் 687 நாட்களுக்கு பிறகு இன்று முதல் விரைவு ரெயிலாக இயக்கப்படுகிறது.
நாகப்பட்டினம் - திருச்சி வரையிலான சிறப்பு விரைவு ரெயில் சேவை தொடக்கம்.
நாகப்பட்டினம் - திருச்சி வரையிலான சிறப்பு விரைவு ரெயில் சேவை தொடக்கம்.
Published on

நாகப்பட்டினம்:

கொரோனா பரவல் அச்சம் காரணமாக நாகப்பட்டினம்&திருச்சி வரை செல்லும் பயணிகள் ரெயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் 687 நாட்களுக்குப் பிறகு நாகப்பட்டினம்&திருச்சிராப்பள்ளி இடையேயான ரெயில் சேவை மீண்டும் இன்று முதல் தொடங்கப்பட்டு சிறப்பு விரைவு ரெயிலாக இயக்கப்படுகிறது. இந்திய வர்த்தக தொழிற் குழுமம் சார்பாக ரெயில் எஞ்சினுக்கு மாலை அணிவிக்கப்பட்டு நாகப்பட்டினம் ரெயில் நிலையம் மேலாளர், லோகோ பைலட், அசிஸ்டென்ட் லோகோ பைலட், காவலர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

பின்னர் ரெயிலில் பயணம் செய்த அனைத்து பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் 

ரெயில்வே ஊழியர்கள் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிகளை கடைபிடிக்கும் படி பயணிகளை அறிவுறுத்தி வருகின்றனர். முதல் நாளான இன்று ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com