தோப்பில் காயத்துடன் கிடந்த மயில் மீட்பு

நாகை அருகே தோப்பில் காயத்துடன் கிடந்த மயிலை மீட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது
காலில் அடிப்பட்டு காயமடைந்த மயில்.
காலில் அடிப்பட்டு காயமடைந்த மயில்.
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் நாகூர் பங்களா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மஸ்தான். இவர் தோப்பில் 50க்கும் மேற்பட்ட மாமரங்களை வைத்து பராமரித்து வருகிறார். இந்த நிலையில், வழக்கம்போல மரங்களை பராமரிப்பதற்காக தனது மாந்தோப்புக்கு வந்துள்ளார்.

அப்போது மரத்தின் கீழே கால் முறிந்த நிலையில் மயில் ஒன்று பறக்க முடியாமல் நின்று கொண்டிருந்ததை பார்த்தார். அதைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளுக்கு மஸ்தான் தகவல் தெரிவித்தார். 

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனஉயிரின காப்பாளர் யோகேஷ்குமார்மீனா, வனசரக அலுவலர் ஜோசப் டேனியல், வனவர் ஆனந்தீஸ்வரன், வன காப்பாளர் பாக்யராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மயிலை மீட்டு நாகை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

தொடர்ந்து மூன்று நாட்கள் சிகிச்சை முடிந்த பிறகு மயிலை வனப்பகுதிக்குள் கொண்டுவிட இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com