ஔவையார் கோவில் ஆண்டு விழா

வேதாரண்யம் அருகே ஔவையார் கோவிலில் நடந்த ஆண்டு விழாவில் மும்மதத்தினர் பங்கேற்றனர்.
சிறப்பு அலங்காரத்தில் ஔவையின் தங்கை உப்பை.
சிறப்பு அலங்காரத்தில் ஔவையின் தங்கை உப்பை.
Published on

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா துளசியபட்டினம் கிராமத்தில் விஸ்வநாதர் ஔவையார் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஔவைக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இந்த ஔவையார் கோவிலின் 48-வது ஆண்டு திருவிழா தமிழக அரசு சார்பில் அரசு விழாவாக நடைபெற்றது.

விழாவிற்கு நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்து பேசியதாவது:-

அரசு சார்பில் நடத்தப் படும் இந்த விழாவை வருங்காலத்தில் மிகச் சிறப்பாக நடத்தவும், விஸ்வநாதர் ஔவை கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தவும் உடன் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் ஒத்துழைப்போடு வருங்காலத்தில் அவ்வாறு விழா சிறப்பாக நடத்தப்படும் என்றார்.

விழாவில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர் என அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக விளங்கியது

X

Maalai Malar
www.maalaimalar.com