60 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்

நாகை மாவட்டத்தில் 60 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருமண நிதி உதவி வழங்கப்பட்டது.
திருமண நிதி உதவி வழங்கப்பட்டது.
Published on

நாகப்பட்டினம்:

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி வழங்கும் விழா நாகையில் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகை, கீவளூர், கீழையூர், வேதாரண்யம், திருமருகல், 

தலைஞாயிறு உள்ளிட்ட மாவட்டத்தின் 6 ஒன்றியத்தைச் சேர்ந்த 

60 பயனாளிகளுக்கு ரூ.52,11,360 மதிப்பீட்டில் தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவியை கலெக்டர் வழங்கினர். 

ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கத்தையும், உதவித்தொகையும் அவர் வழங்கினார். விழாவில் மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், எம்.எல்.ஏ.க்கள் முகம்மது ஷாநவாஸ், நாகை மாலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com