ஆத்தூர் தொழிலாளி சாவில் மர்மம் நீடிப்பு

நிஷா, நாமக்கல் மாவட்டம் வையப்பமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
ஆத்தூர் தொழிலாளி சாவில் மர்மம் நீடிப்பு
Published on

சேலம்:

ஆத்தூர் நரசிங்கபுரம் திட்டா நகரில் வசித்து வந்தவர் மணி (வயது 43), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி காந்திமதி (36). இவர்களுக்கு கோகுல்நாத் (20) என்ற மகனும், நிஷா (18) என்ற மகளும் உள்ளனர். கோகுல்நாத் கொத்தனார் வேலை செய்து வருகிறார்.

நிஷா, நாமக்கல் மாவட்டம் வையப்பமலை பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வருகிறார். மணியின் மனைவி காந்திமதிக்கு கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விடுவார்.

பின்னர் அவராக வீட்டுக்கு வந்து விடுவார். அதேபோல் கடந்த 17-ந் தேதி காந்திமதி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் மணி தனது மகனிடம் அம்மாவை தேடி பார்த்து வருகிறேன் என கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார்.

இந்த நிலையில் திட்டாநகர் பகுதியில் உள்ள ெரயில்வே கேட் அருகே மணி ெரயிலில் அடிபட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலே இறந்து கிடந்தார். இது குறித்து நேற்று காலை தண்டவாள பாதையில் வேலை பார்த்து வந்த ஊழியர் ெரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஏட்டு வெங்கடாசலம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் உடலை கைப்பற்றி ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் மணி, ெரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ெரயிலில் அடிபட்டு இறந்து விட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனினும் மணி சாவில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. தொடர்ந்து இதுபற்றி விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com