என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மயிலம் சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
- மயிலம் சுந்தர விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- 108 புனித பொருட்கள் யாகம் சுமங்கலிகள் வழிபாடு இரண்டாம் கால யாகசாலை வழிபாடு நடைபெற்றது.
மயிலம், செப்.17-
மயிலம் முருகன் கோவில் மலை அடிவாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்றஸ்சுந்தர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது என மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலையில் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் கடந்த 6 மாத காலமாக கோவிலை புரைமைக்கப்பட்டு வண்ணங்கள் தீட்டி கோவில் புதுப்பிக்கப்ட்டு கோவில் அருகில் யாக சாலை அமைத்து கடந்த 15-ம் தேதி காலை 6 மணிக்கு விநாயகர் பால சித்தர் வள்ளி தேவசேனா உடனுற சுப்பிரமணியர் வழிபாடு கணபதியாகம் நடைபெற்றது.மாலை 3 மணி அளவில் பூமித்தாய் புதல்வன் வழிபாடு புனித மண் சேகரித்தல் முளைப்பாரி எடுதல் காப்பு கட்டுதல் இறைவனை கலசங்களில் எழுந்தருள செய்தல் முதற்கால வேள்வி நெய் முதலான 108 புனித பொருட்களால் முதற்கால யாகம் நடந்தது. 16-ந் தேதி காலை 8.30 மணி அளவில் புனித ஆ வழிபாடு, 108 புனித பொருட்கள் யாகம் சுமங்கலிகள் வழிபாடு இரண்டாம் கால யாகசாலை வழிபாடு நடைபெற்றது.
108 நெய் முதலான புனித பொருட்களால் 3-ம்கால யாக கேள்விகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 5 மணிக்கு யாக வேள்வி தத்துவங்கள் பூ சித்து இறை மூர்த்தத்தில் சேர்த்தல் நெய் மற்றும்108 புனித பொருட்களால் 4-ம் கால யாக வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து காலை அளவில் புனித கலசங்கள் புறப்பாடு 6.45 மணி அளவில் ஸ்ரீ சுந்தர விநாயகர் கோவில் விமான கலசம் மீது மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சுவாமிகள் கோபுர கலசம் மீது புனித நீரை ஊற்றியும் மூலவர் சுந்தர விநாயகருக்கு புனித நீர் ஊற்றியும் கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மயிலம் பொம்மை புற ஆதீனம் 20 பட்டம் சிவஞானபாளைய சுவாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்