search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியை- 7 மாணவர்களுக்கு வாந்தி, பேதி
    X

    சிகிச்சை பெற்று வந்த மாணவி ஒருவரை மாவட்ட கலெக்டர் லலிதா சந்தித்து ஆறுதல் கூறினார்.

    நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியை- 7 மாணவர்களுக்கு வாந்தி, பேதி

    • பள்ளியை சுற்றிலும் கிருமி நாசினி, பிளிசீங்பவுடர் தெளிக்கப்பட்டு சுகாதாரபணிகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
    • குழந்தைகள் பாதிப்பு காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த புளிச்சக்காடு பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி யில் புளிச்சக்காடு, தோட்ட மானியம், ஆலமரத்தடி, நித்திய வனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 18 மாணவ -மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியராக ராகினி பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு மாணவ- மாணவிகளுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு விடுமுறை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்தனர். தொடர்ந்து பள்ளி விடுமுறை பின் பள்ளிக்கு வந்த மேலும் 5 மாணவ -மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியை க்கு காய்ச்சல் மற்றும் வாந்தி அறிகுறி இருந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி நகர மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி தலைமையில் சுகாதாரத் துறையினர், நகராட்சி ஊழியர்கள் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து பள்ளியை சுற்றிலும் கிருமி நாசினி, பிளிசீங்பவுடர் தெளிக்கப்பட்டு சுகாதாரபணிகள் மேற்கொ ள்ளப்பட்டு குடிநீர் பரிசோ தனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    கிஷோர் (5), சக்திச ரவணன் (9), பவதாரணி (8), ரஞ்சித்பவன், யாழினி, கபிஷ்கா, அனுஷ்கா உள்ளிட்ட பள்ளியில் பயிலும் 18 மாணவ- மாணவிகள், பள்ளி தலைமை ஆசிரியை ஆகியோரை இரண்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.சிகிச்சைக்கு பின்னர் 2 மாணவிகளை தவிர மற்ற மாணவ-மாணவிகள் மற்றும் தலைமைஆசிரியை வீடு திரும்பினர். மாணவ மாணவிகளின் உடல்நலம் பாதிப்பிற்கு வீட்டில் சாப்பிட்ட உணவு காரணமா அல்லது குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகிறது. சீர்காழி கல்வி மாவட்ட அலுவலர் செல்வராஜ் தலைமையில் கல்வித் துறை அதிகாரிகளும் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை கலெக்டர் லலிதா சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 2 மாணவிகளை சந்தித்து பெற்றோர்களிடம் விசாரி த்தார்.

    தொடர்ந்து தலைமை மருத்துவர் பானுமதியிடம் தேவையான சிகிச்சையளிக்க அறிவுறு த்தினார். பின்னர் குழந்தைகள் பாதிப்பு காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது கோட்டாட்சியர் அர்ச்சனா, வட்டாட்சியர் செந்தில்குமார், நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன், நகர்மன்ற துணை தலைவர் சுப்ப ராயன், நகர்மன்ற உறுப்பினர் பாஸ்கரன், ரமாமணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×