சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்த நகராட்சி ஊழியர்கள்

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி உட்பட்ட பகுதியில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து நகராட்சி அலுவலகத்தில் கட்டி வைத்தனர்.
சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்த நகராட்சி ஊழியர்கள்
Published on

கூடுவாஞ்சேரி:

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாடுகளை வளர்க்கும் உரிமையாளர்கள் தங்களது மாடுகளை சாலையில் சுற்றி திரியாமல் தங்களது வீடுகளில் கட்டி வளர்க்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி உட்பட்ட பகுதியில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து நகராட்சி அலுவலகத்தில் கட்டி வைத்தனர்.

பிடிக்கப்பட்ட மாடுகளை 24 மணி நேரத்தில் மாட்டின் உரிமையாளர்கள் மீட்கவில்லை என்றால் பொது ஏலம் விடப்படும் என்று ஏற்கனவே நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com