search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்
    X

    விழாவில் கொடிமரத்தில் கொடியேற்றி தீபாராதனை காட்டப்பட்ட காட்சி.

    முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றம்

    • 8-ம் திருநாள் அன்று ஏராளமான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து பால்குடம் சுமந்து முக்கூடலில் சுற்றி வருவது மிகவும் சிறப்பான நிகழ்ச்சியாக இருக்கும்.
    • முக்கூடலை சேர்ந்த நபர்கள் மற்றும் அவரது உறவினர்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்வது இவ்வூரில் தொன்றுதொட்டு வரும் பழக்கமாகும்.

    முக்கூடல்:

    முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் பிரசித்திப் பெற்ற முத்துமாலையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் 11 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டும் 11 நாட்கள் விழா நடக்க இருப்பதால் நேற்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் தீர்த்தவாரியும், அம்பாள் சப்பர பவனியும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. 1-ம் திருநாள் ஹரிராம் சேட் நற்பணி மன்றம் மற்றும் நாடார் இளைஞர் அணி சார்பாக விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    விழா நாட்களில் தினமும் காலையில் அம்பாளுக்கு பூஜையும், பகல் 12 மணிக்கு பகல் பூஜையும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும். மாலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து முக்கூடல் நகரை சுற்றி தீர்த்தவாரியும், இரவு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்பாள் ரத பவனியும் இரவில் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.

    பால் குடம்

    8-ம் திருநாள் அன்று ஏராளமான பக்தர்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து பால்குடம் சுமந்து முக்கூடலில் சுற்றி வருவது மிகவும் சிறப்பான நிகழ்ச்சியாக இருக்கும். 9-ம் திருநாள் அன்று இரவு அம்பாள் சப்பர பவனி உடன் ஏராளமான கலை நிகழ்ச்சிகள், பல மேளதாளங்களுடன் விமரிசையாக நடைபெறும்.

    10-ம் திருநாள் அன்று தாமிரபரனி ஆற்றங்கரையில் கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள், வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கண்ணை கவரும் பல நிறுவனங்களின் ஸ்டால்களும், மற்றும் ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.

    மேலும் காலை 4 மணி அளவில் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும். 11-ம் திருநாள் அன்று தாமிரபரணி ஆற்றங்கரையில் கோவில் வளாகத்தில் திருவிழா நடைபெறும். இவ்விழாவில் வெளி ஊர்களில் வசிக்கும் அதாவது மும்பை, சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து முக்கூடலை சேர்ந்த நபர்கள் மற்றும் அவரது உறவினர்கள் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்வது இவ்வூரில் தொன்றுதொட்டு வரும் பழக்கமாகும்.

    முக்கூடல் ஊர் மக்கள் மட்டுமின்றி இந்த ஊரை சுற்றி உள்ள பல கிராமங்களை சேர்ந்தவர்கள் விரதமிருந்து இந்த கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். கொடியேற்று விழாவில் ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காவல்துறை, தீயணைப்புத் துறை, சுகாதாரத்துறை, அறநிலைய த்துறை ஆகிய அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் எல்.வேல்சாமி, செயலாளர் எஸ். சந்திரன், துணைத் தலைவர் மாரியப்பன், பொருளாளர் முத்தரசன், மற்றும் முக்கூடல் இந்து நாடார்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×