search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தார்பாய் கொண்டு மூடாமல் மணல் ஏற்றிச்செல்லும் லாரிகளால் வாகன ஓட்டிகள் அவதி
    X

    தார்பாய் கொண்டு மூடாமல் மணல் ஏற்றிச்செல்லும் லாரிகளால் வாகன ஓட்டிகள் அவதி

    • ஆன்லைன் புக்கிங் மூலம் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் சிறு டிராக்டர்களில் மணல் ஏற்றி செல்லப்படுகிறது.
    • மணல் ஏற்றி செல்லும் லாரிகள் தார்பாய் கொண்டு மூடாமல் செல்வதால் வாகன ஓட்டிகள் கண்களில் மண் துகள்கள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் பாலூரான்படுகை, குன்னம் ஆகிய 2 இடங்களில் யார்டு அமைக்கப்பட்டு மணல் விற்பனை நடைபெற்று வருகிறது. ஆன்லைன் புக்கிங் மூலம் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் சிறு டிராக்டர்களில் மணல் ஏற்றி செல்லப்படுகிறது.

    இவ்வாறு சீர்காழி மற்றும் வெளிமாவட்டங்களுக்கு லாரிகள், டிராக்டர்களில் மணல் ஏற்றி செல்லும்போது மேல்பகுதியை தார்பாய் கொண்டு மூடாமல் எடுத்து செல்லப்படுவதால் சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் கண்களில் மணல் துகள்கள் விழுந்து பாதிப்பு ஏற்படுகிறது. அதோடு இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் மணல் துகள்விழும்போது தடுமாறி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது.

    அதேபோல் நகர் பகுதிகளில் மணல் ஏற்றிசெல்லும் லாரிகள், கனரக லாரிகள், டிராக்டர்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. ஆகையால் மணல் சேமிப்பு கிடங்குகளிலிருந்து மணல் ஏற்றிவரும் லாரிகள் தார்போய் கொண்டு மூடப்பட்டு கொண்டு செல்வதை உறுதி செய்வதோடு உரிய ஆவணங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமம் இன்றி மணல் லாரிகள் இயக்கப்படுகிறதா என்பதையும் சம்பத்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×