search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரிஷிவந்தியத்தில் மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது
    X

    ரிஷிவந்தியத்தில் மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது

    • ரிஷிவந்தியத்தில் மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் தலைமையிலான போலீசார் கெடிலம் கூட்டுரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும், திரும்பிச் செல்ல முய ன்றார். இதை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர் முட்டியம் கிராமத்தை சேர்ந்த கூத்தன் மகன் ரகுராமன் (40) என்பதும், இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் இருசக்கர வாகனம் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருக்கோவிலூர் அடுத்த ஜி.அரியூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ரகுராமனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×