search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி மன்ற கூட்டம்
    X

    மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி மன்ற கூட்டம்

    • கூட்டத்தில் மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு விரைவில் நிறைவேற்றி தர தீர்மானிக்கப்பட்டது.
    • நாட்டு நலப்பணித்திட்ட முகாமை பேரூராட்சி தலைவர் கு.பார்வதி மோகன் தொடங்கி வைத்தார்.

    நெல்லை:

    மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவர் கு.பார்வதி மோகன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் லவ்லின் மேபா, துணைத்தலைவர் நம்பி ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு விரைவில் நிறைவேற்றி தர தீர்மானிக்கப்பட்டது. மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட முகாம் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.முகாமை பேரூராட்சி தலைவர் கு.பார்வதி மோகன் தொடங்கி வைத்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் லதாராணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் பி.குமார், மகாராஜன், பேரூராட்சி மன்ற அலுவலர்கள் ஆறுமுகம், கலையரசி, நாட்டு நல பணித்திட்ட அலுவலர்கள் ஆவுடையப்ப குருக்கள், ரூபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×