search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே குரங்கு கடித்து 3 பேர் அவதி: பொதுமக்கள் அச்சம்
    X

    பண்ருட்டி அருகே குரங்கு கடித்து 3 பேர் அவதி: பொதுமக்கள் அச்சம்

    • இதையடுத்து 3 பேரும் ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்றனர்.
    • குரங்குகளை பிடிக்க உத்தரவிடுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த ஓறையூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக குரங்குகளின் அட்டகாசம் அதிக அளவில் உள்ளது. நேற்று மாலை விவசாய வேலைக்கு சென்று திரும்பிய கூலி தொழிலாளர்கள் சரஸ்வதி (வயது 43), காத்தவராயன் (55), ஆசைத்தம்பி (53) ஆகிய 3 பேரை குரங்கு கடித்தது.

    இதையடுத்து 3 பேரும் ஒறையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்றனர்.மேலும், இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை. இதனால் வீட்டை விட்டு வெளியே வர பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக குரங்குகளை பிடிக்க உத்தரவிடுமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×