search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூங்கில்துறைப்பட்டு அருகே தொழிலாளி வீட்டில் பணம் திருட்டு
    X

    மூங்கில்துறைப்பட்டு அருகே தொழிலாளி வீட்டில் பணம் திருட்டு

    • பெரியநாயகி நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது41)கூலி தொழிலாளி.
    • இதுகுறித்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே பெரியநாயகி நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது41)கூலி தொழிலாளி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கோவா மாநிலத்துக்கு வேலைக்காக சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக வீடு பூட்டிக் கிடந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×