search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதம்பரத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் மனைவி மாயம்
    X

    சிதம்பரத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் மனைவி மாயம்

    வீட்டில் இருந்த 4½ பவுன் நகைகளை எடுத்து சென்றுவிட்டார்.

    கடலூர்:

    சிதம்பரம் மன்னார்குடி தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ். டிராவல்ஸ் உரிமையாளர். இவரது மனைவி சந்தியா. இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது குழந்தை இல்லை. கடந்த 20-ந்தேதி இரவு சந்தியா திடீரென்று மயமானார். அவர் வீட்டில் இருந்த 4½ பவுன் நகைகளை எடுத்து சென்றுவிட்டார். இதுகுறித்து மோகன்ராஜ் சிதம்பரம் போலீசில் புகார் அளித்தார்.

    அதில் தனது மனைவியை தன்னிடம் ஆக்டிங் டிரைவராக வேலை பார்த்து வந்த சிதம்பரம் கீழ்கரையை சேர்ந்த ஜெயசூர்யா கடத்தி சென்றதாக கூறிஉள்ளார். இது குறித்து சிதம்பரம் சப்- இன்ஸ்பெக்டர் பரணிதரன் வழக்குப்பதிவு செய்து மாயமான சந்தியாவை தேடி வருகிறார்.

    Next Story
    ×