மாயமான மீன் வியாபாரி ஏரியில் பிணமாக மீட்பு

நேற்று சிவனின் மகன் கோவிந்தராஜ் தனது தந்தையை ஏரிபக்கம் சென்று தேடி உள்ளார். அப்போது ஏரியில் சிவன் இறந்து கிடந்தது தெரிய வந்தது.போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயமான மீன் வியாபாரி ஏரியில் பிணமாக மீட்பு
Published on

 பாப்பிரெட்டிப்பட்டி,

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கொக்கராப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவன் (வயது50). மீன் வியாபாரியான இவருக்கு காவிரி என்ற மனைவியும், இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி அன்று சிவனும், பக்கத்து வீட்டுக்காரரான சுகுமார் ஆகிய இருவரும் சாலூர் கோட்டைமேடு அருகில் உள்ள பெரிய ஏரியில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சுகுமார் மட்டும் வீடு திரும்பினார். ஆனால் சிவன் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

நேற்று சிவனின் மகன் கோவிந்தராஜ் தனது தந்தையை ஏரிபக்கம் சென்று தேடி உள்ளார். அப்போது ஏரியில் சிவன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஏரியில் பிணமாக கிடந்த சிவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com