search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளம் அருகே மின்னொளி கபடி போட்டி - புளியங்குளம் அணிக்கு முதல் பரிசு
    X

    முதல் பரிசு வென்ற புளியங்குளம் அணியினருக்கு வெற்றி கோப்பையை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன் வழங்கிய காட்சி.

    சாத்தான்குளம் அருகே மின்னொளி கபடி போட்டி - புளியங்குளம் அணிக்கு முதல் பரிசு

    • சாத்தான்குளம் அருகே உள்ள புளியங்குளத்தில் மின்னொளி கபடி போட்டி கள் 2 நாள் நடைபெற்றது.
    • போட்டியை சாத்தான் குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தொடங்கி வைத்தார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள புளியங்குளத்தில் தி.மு.க. கிளை கழகம், மாவட்ட தி.மு.க. சிறுப்பான்மை பிரிவு இணைந்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு 2-ம் ஆண்டு மின்னொளி கபடி போட்டி கள் 2 நாள் நடைபெற்றது.

    இதில் புளியங்குளம், பேய்க்குளம், நாசரேத், சாத்தான்குளம், நெல்லை காவல்துறை அணி உள்ளிட்ட 36 அணிகள் கலந்து கொண்டன.

    போட்டியை சாத்தான் குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தொடங்கி வைத்தார். இறுதி போட்டியில் புளியங் குளம் சுந்தரி கிளப் அணி யும், கருவேலம்பாடு அணி யும் மோதின. இதில் புளியங் குளம் அணி வென்று முதல் பரிசை தட்டிச்சென்றது. 2-ம் பரிசு கருவேலம்பாடு அணிக்கும், 3-ம் பரிசு நெல்லை காவல்துறை அணிக்கும், 4-ம் பரிசு செம்பூர் அணிக்கும் கிடைத்தது.

    பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு மாவட்ட தி.மு.க. சிறுப்பான்மை பிரிவு துணை செயலர் திருநாவுக் கரசு தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் பிரிவு மாவட்ட துணை செயலர் மோகன் முன்னிலை வகித்தார். முதல் இடத்தை பரிசு பெற்ற புளியங்குளம் அணியினருக்கு ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. வழங்கிய முதல் பரிசு ரூ. 20,070-ஐ ஆழ்வார்திருநகரி வட்டார தலைவர் கோதண்டராமன், பேய்க்குளம் டாக்டர் ரமேஷ் பிரபு ஆகியோர் வழங்கினர்.

    வெற்றி கோப்பையை ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலரும், மாவட்ட அறங்காவலர் குழு தலைவருமான எஸ். பார்த்திபன் வழங்கினார். 2-ம் பரிசு பெற்ற கருவேலம் பாடு அணிக்கு ரூ.15,070-ஐ ஆழ்வார்திருநகரி ஒன்றியக் குழு தலைவர் ஜனகர் வழங்கினார்.

    3-ம் பரிசு பெற்ற நெல்லை காவல்துறை அணிக்கு ரூ.7070-ஐ, விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் ஆறுமுகநயினார் வழங்கினார். 4-ம் பரிசு பெற்ற செம்பூர் அணிக்கு ரூ.5070-ஐ சாலைபாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினர் போனிபாஸ் வழங்கினார்.

    இதில் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில அமைப்பாளர் இசக்கிமுத்து, தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ், ஆழ்வார்திருநகரி வட்டார செயலர் சேகர், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×