search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு
    X

    நீலகிரியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு

    • ஊட்டியில் தலைக்குந்தா பகுதியில் மரங்கள் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள இடங்களை அமைச்சா்கள் பாா்வையிட்டனர்.
    • மின் இணைப்புகள் சேதமடை–ந்த பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மின் ஊழி–யா்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, முதல்-அமைச்சரின் உத்தரவின்படி பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு மேற்கொள்ள தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி மற்றும் நில நிா்வாக ஆணையா் எஸ்.கே.பிரபாகா் ஆகியோா் ஊட்டி வந்தனர்.

    வனத்துறை அமைச்சா் ராமச்சந்திரனுடன் ஊட்டி மற்றும் கூடலூா் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை அவர்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

    ஊட்டியில் தலைக்குந்தா பகுதியில் மரங்கள் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள இடங்களை அமைச்சா்கள் பாா்வையிட்டனர்.

    பின்னர் வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் நிருப–ர்களிடம் கூறியதாவது:-

    மாவட்டத்தில் மழையால் எந்தெந்த இடங்களில் பாதிப்புகள் அதிகம் உள்ளதோ அந்த இடங்களில் எதிா்காலத்தில் பாதிப்பு ஏற்படாதவாறு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    வெள்ள சேதம் குறித்து ஆய்வு செய்த பின், அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பணிகள் மேற்கொள்ளப்படும்.

    பேரிடா் மீட்புக் குழுவினா் 80 போ் அரக்கோணத்தில் இருந்து நீலகிரிக்கு வந்துள்ளனா். இவா்களில் 40 போ் உதகையிலும், 40 போ் கூடலூரிலும் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு–ள்ளனா். தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாகவும் பேரிடா் மீட்புப் படையினா் வரவழைக்கப்படுவா்.

    கூடலூா் பகுதிகளில் மழையால் பாதிப்படைந்து முகாம்களில் தங்க–வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டுள்ளது. மின் இணைப்புகள் சேதமடை–ந்த பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மின் ஊழி–யா்கள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

    சனிக்கிழமைக்குள்(இன்று) இந்த சீரமைப்புப் பணிகள் நிறைவடையும்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி மற்றும் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் உடனிருந்தனா்.

    Next Story
    ×