பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திறன்மிகு மையங்கள்- அமைச்சர் பொன்முடி தகவல்

தொழில்துறை 4.0 திட்டத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க திறன்மிகு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ஆசிரியர்களுக்கு உலகத்தரம் மிக்க திறனை மேம்படுத்த 120 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு சென்னை அம்பத்தூரில் உலகளாவிய திறன் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திறன்மிகு மையங்கள்- அமைச்சர் பொன்முடி தகவல்
Published on

சென்னை:

சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாகவும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள 6295 இடங்களில் 3184 இடங்கள் காலியாக உள்ளதாகவும் அந்தியூர் உறுப்பினர் வெங்கடாசலம் கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, தொழில்துறை 4.0 திட்டத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க திறன்மிகு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு உலகத்தரம் மிக்க திறனை மேம்படுத்த 120 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு சென்னை அம்பத்தூரில் உலகளாவிய திறன் பயிற்சி மையம் அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com