search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுவது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு
    X

    கடலூர் புதிய பாலம் கட்டுவது தொடர்பாக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வு பணி நடைபெற்றது. 

    கடலூர் கெடிலம் ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுவது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு

    • அமைச்சர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோ னைகளை வழங்கினார்.
    • நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி பகுதிகளில் முக்கிய சாலை சந்திப்புகளில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலம் நடைபெற்று வரும் விரிவாக்க பணிகளை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாநகராட்சி நுழைவாயிலான ஆல் பேட்டை சாலை சந்திப்பில் பொது போக்குவரத்திற்கு இடையூறின்றி ஒழுங்குபடுத்தும் விதமாகவும், விபத்து தடுப்பு நடவடிக்கையாகவும், இச்சாலை சந்திப்பை ரூ. 7 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும், கடலூர், கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அண்ணா பாலத்துக்கு மாற்றாக பழைய இரும்பு பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்டுவது தொடர்பாகவும் மற்றும் உழவர் சந்தை அருகே உள்ள சாலை சந்திப்பை மேம்படுத்துவது குறித்தும் மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பார்வையிட்டு, போக்குவரத்திற்கு இடையூறின்றி இப்பணிக ளை துரிதமாக மேற்கொ ள்வது குறித்து துறை சார்ந்த அலுவலர் களுக்கு பல்வேறு ஆலோ சனைகளை வழங்கினார்.

    அப்போது கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் உள்ளனர்.

    Next Story
    ×