குறைவான மாணவர்களால் அதிர்ச்சி பள்ளி ஆசிரியர்களை கண்டித்த அமைச்சர் அர.சக்கரபாணி

சத்திரப்பட்டியில் சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா, மேல்நிலைத் தொட்டி திறப்புவிழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.பள்ளியில் மாணவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததைப்பார்த்து பள்ளி ஆசிரியர்களை அழைத்து அமைச்சர் கண்டித்தார்.
சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு  தேவையான கல்வி உபகரணங்களை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.
சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.
Published on

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சத்திரப்பட்டியில் சார்பதிவாளர் அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா, மேல்நிலைத் தொட்டி திறப்புவிழா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் அமைச்சர் அர.சக்கரபாணி, கலெக்டர் விசாகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற அமைச்சர் அர.சக்கரபாணி பள்ளியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பள்ளிக் கட்டிடங்கள், மைதானம் உள்ளிட்டவை முறையாக பராமரிக்காமலும், சேதடைந்தும் காணப்பட்டது.

மேலும் பள்ளியில் மாணவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருந்ததைப்பார்த்து பள்ளி ஆசிரியர்களை அழைத்து அமைச்சர் கண்டித்தார். ஆசிரியர் பணியை அர்ப்பணிப்புடன் செய்யுங்கள். அப்போதுதான் அரசு பள்ளியில் மாணவர்கள் அதிகம் வந்து சேருவார்கள். மேலும் நடைபெற உள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சியடைய வேண்டும்.

மைதானம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டுவைத்து பராமரிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் சிந்தலவாடம்பட்டியை சேர்ந்த விவசாயி தண்டபாணி (வயது 55) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு யானை தாக்கி உயிரிழந்தார். அவரது வீட்டிற்கு நேரில் சென்ற அமைச்சர் அர.சக்கரபாணி உயிரிழந்த தண்டபாணியின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சத்திற்கான உதவியை வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com