search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில் மினி மாரத்தான் போட்டி
    X

    கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மினிமாரத்தான் ஓட்டத்தை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்து தானும் ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரியில் மினி மாரத்தான் போட்டி

    • மருத்து வத்துறை 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடந்த மினி மாரத்தான் போட்டி.
    • கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்து, ஓட்டப்போட்டியில் பங்கேற்றார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்து வத்துறை 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நடந்த மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்து, ஓட்டப்போட்டியில் பங்கேற்றார்.

    இதில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மருத்துவர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதா ரத்துறை பணியாளர்கள், தன்னார்வலர்கள், ரெட்கிராஸ் சங்க பிரதிநிதிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் என 700-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கி ராயக்கோட்டை மேம்பாலம், பெத்ததாளப்பள்ளி, தாலுகா போலீஸ் நிலையம் சென்று மீண்டும் ராயக்கோட்டை சாலை வழியாக கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறை வடைந்தது.

    பின்னர், இந்த போட்டியில் முதல் பரிசு வென்ற எலத்தகிரி மாணவர் ஜார்ஜ், இரண்டாம் பரிசு பெற்ற பாலக்கோடு மாணவர் பெருமாள், மூன்றாம் பரிசு பெற்ற வி.மாதேப்பட்டி மாணவர் மேகநாதன், பெண்கள் பிரிவில் முதல் பரிசு பெற்ற உமாவதி, இரண்டாம் பரிசு பெற்ற பிரியா, மூன்றாம் பரிசு பெற்ற டாக்டர்.சங்கீதா ஆகியோருக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழகளும், மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்க ளையும் கலெக்டர் வழங்கினார்.

    மேலும், பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் எஸ்.முதுகானப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச ரத்த தான முகாம் நடைபெற்றது. அத்துடன் சுகாதார பணியாளர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, பெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×