search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலையில் எம்.ஜி.ஆர். நினைவுநாள் நிகழ்ச்சி
    X

    உடுமலையில் எம்.ஜி.ஆர். நினைவுநாள் நிகழ்ச்சி

    உடுமலை :

    மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர். நினைவு நாளை ஒட்டி அ.தி.மு.க. திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உடுமலை கே .ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஆலோசனைப்படி உடுமலை நகர அ.தி.மு.க. சார்பில் கபூர் கான் வீதி உழவர் சந்தை அருகில் உள்ள அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க பேரவை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஹக்கீம் தலைமை தாங்கினார் . திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட இணை செயலாளர் சாஸ்திரி சீனிவாசன், அண்ணா தொழிற்சங்க பேரவை மாவட்ட செயலாளர் துபாய் ஆறுமுகம் , நாகராஜ், வேலுச்சாமி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி தாமோதர சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×