search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.ஜி.ஆர். பிறந்த நாளைபொது மக்களுக்கு  அன்னதானம் வழங்கிக் கொண்டாட முடிவு
    X

    எம்.ஜி.ஆர். பிறந்த நாளைபொது மக்களுக்கு அன்னதானம் வழங்கிக் கொண்டாட முடிவு

    • முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெய ராமன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.
    • பூத் கமிட்டி, பாசறை அமைப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் விழா ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கழக அலுவல கத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி.ஜெய ராமன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.

    இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன், என்.எஸ்.என்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில், திருப்பூரில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, மேலும் பார்க் ரோட்டில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கிக் கொண்டாடுவது. பூத் கமிட்டி, பாசறை அமைப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    இதில் கட்சி நிர்வாகிகள் சிட்டி பழனிசாமி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, ஏ.எஸ்.கண்ணன், வி.பி.என்.குமார், கே.பி.ஜி.மகேஷ்ராம், தம்பி மனோகரன், கேச வன், பட்டுலிங்கம், கருணாகரன், திலகர் நகர் சுப்பு, ஹரிஹரசுதன், வேலுமணி, பி.கே.எம்.முத்து, சுந்தராம்பாள், கலைமகள் கோபால்சாமி, சென்னிமலை கோபால கிருஷ்ணன் உள்பட கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றார்கள்.

    Next Story
    ×