

மாமல்லபுரம்:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாள் விழா இன்று மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகம் எதிரில் அ.தி.மு.க நகர செயலாளர் ஏ.கணேசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. பேரூராட்சி துணைத் தலைவர் க.ராகவன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து அண்ணாநகர், பூஞ்சேரி, தேவநேரி பகுதியிலும் விழாக்கள் நடைபெற்றது. இன்று காணும் பொங்கல் என்பதால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. அவர்களுக்கு கட்சியினர் அன்னதானம் வழங்கினார்கள்.