search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் மேயர் ஆய்வு
    X

    தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆய்வு செய்தார்.

    தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் மேயர் ஆய்வு

    • தற்காலிக சந்தை சேறும், சகதியுமாக உள்ளது.
    • காமராஜா் மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய இன்று முதல் தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் அரண்மனை அருகேயுள்ள காமராஜா் காய்கறி மார்க்கெட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 17.50 கோடி மதிப்பில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 304 கடைகளும், 170 இரு சக்கர வாகனங்கள், 30 நான்கு சக்கர வாகனங்கள், 20 லாரிகள் நிறுத்தவும் இட வசதி செய்யப்பட்டுள்ளது.

    கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக இப்பணி நடைபெற்றதையொட்டி, புதுக்கோட்டை சாலையில் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. தொடா் மழை காரணமாக தற்காலிக சந்தை முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிட்டதால், காமராஜா் சந்தையைத் திறக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

    இந்நிலையில், காமராஜா் காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

    தஞ்சாவூா் காமராஜா் காய்கறி மார்க்கெட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. மழைக்காலமாக இருப்பதால், தற்காலிக சந்தை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால், அங்குள்ள வியாபாரிகள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, காமராஜா் மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய இன்று முதல் தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இந்தச் சந்தையில் வியாபாரம் செய்ய ஏற்கெனவே மாநகராட்சி நிா்வாகத்திடம் அதற்கான முன்வைப்புத் தொகை செலுத்திய வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் முறைப்படி இந்தச் மார்க்கெட்டை காணொலி மூலம் திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மண்டலக் குழுத் தலைவா் மேத்தா, மாநகராட்சி செயற் பொறியாளா் ஜெகதீசன், உதவி பொறியாளா்கள் காா்த்தி, ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    Next Story
    ×