search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்க மேயர் நடவடிக்கை
    X

    திருச்செந்தூர் சாலையில் நடைபெற்று வரும் வடிகால் சீரமைப்பு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

    தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்க மேயர் நடவடிக்கை

    • தூத்துக்குடி வி.இ.ரோட்டில் நடைபெற்று வந்த புதிய சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
    • ஜனவரி 31-ந் தேதிக்குள் பணிகள் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்று மேயர் உறுதி அளித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி புதிய பஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியை சுற்றிலும் நடைபெற்று வரும் வேலி அமைக்கும் பணி மற்றும் வி.இ.ரோட்டில் நடைபெற்று வந்த புதிய சாலை பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து சிதம்பரநகர் பகுதியில் நடைபெற்று வரும் சிமெண்டு சாலை பணிகளில் 200 மீட்டர் மட்டுமே அமைக்க வேண்டியுள்ளது. அதனை பார்வையிட்ட மேயர் அப்பகுதி பொதுமக்களிடம் பேசுகையில், இந்த பணிகள் அனைத்தும் வருகிற ஜனவரி மாதம் 31-ந் தேதிக்குள் நிறைவு பெற்று இந்த சாலை முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டி ற்கு வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

    தொடர்ந்து தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம், ஸ்பிக் நகர் பகுதியில் மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளில் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுவதற்கு தீர்வு காணும் வகையில் அந்தப் பகுதியில் ஊராட்சி காலத்தில் அமைக்கப்பட்ட வடிகால்களை மீண்டும் சீரமைத்து மழைநீர் சாலையில் தேங்காமல் செல்ல ஏதுவாக வியாபாரிகள் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதனையும் மேயர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மேயரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    இதில் தெற்கு மண்டல உதவி கமிஷனர் ராமச்சந்திரன், சுகாதார அலுவலர் ராஜபாண்டியன், மாநகர கவுன்சிலர்கள் விஜயகுமார், சுயம்பு, ராஜதுரை, முத்துவேல், பச்சிராஜ், மற்றும் மேயரின் நேர்முக உதவியாளர்கள் ரமேஷ், பிரபாகரன், ஜாஸ்பர் உள்ளிட்ட அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×