search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தேசிய கொடியேற்றினார்
    X

    மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சரவணன் தேசியகொடியேற்றிய காட்சி. அருகில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் உள்ளனர்.

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தேசிய கொடியேற்றினார்

    • குடியரசு தின விழாவையொட்டி நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மேயர் சரவணன் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    • விழாவில் துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நெல்லை:

    குடியரசு தின விழாவையொட்டி நெல்லை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மேயர் சரவணன் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    விழாவில் துணைமேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர பொறியாளர் லெட்சுமணன் வரவேற்று பேசினார். வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் சிலைக்கு மேயர் சரவணன் மாலை செலுத்தினார். பின்னர் விழாவில் தலைமை தாங்கி பேசினார்.

    விழாவில் விருந்தினர்களை வரவேற்கும் விதமாக குழந்தை இயேசு பள்ளி மாணவிகளின் இசை வாத்தியம் இசைத்தனர். தூய யோவான் கல்லுரி 5-வது தமிழ்நாடு பட்டாலியன் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையினை மேயர் ஏற்றுக்கொண்டார்.

    டவுன் கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளி, காந்திநகர் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி, மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது.

    மேலும் மாநகராட்சிக்கு திடக்கழிவு மேலான்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகை யில் பேட்டரி மூலம் இயங்கும் 10 வாகனங்கள் வழங்கப்பட்டது.

    மாநகராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை பாராட்டி மேயர் சரவணன் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

    இதில் மண்டல தலைவர்கள் ரேவதிபிரபு, கதிஜா இக்லாம் பாசிலா, கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×