கருணாநிதி பிறந்தநாளை தமிழ் வளர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும் - முன்னாள் ஊராட்சி தலைவர் முத்து.தேவேந்திரன் வலியுறுத்தல்

தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்த கருணாநிதி பிறந்தநாளை தமிழ் வளர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் ஊராட்சி தலைவர் முத்து.தேவேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
முத்து.தேவேந்திரன் பேட்டி.
முத்து.தேவேந்திரன் பேட்டி.
Published on

சீர்காழி:

சீர்காழியை அடுத்த மேலையூர் பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முத்து. தேவேந்திரன் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வரலாற்று சிறப்புமிக்க நகரம் பூம்புகார். 

இந்தகரை மீட்டெடுத்து தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகிற்கு உணர்த்தியவர் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி ஆவார்.

மேலும் வள்ளுவருக்கு கோட்டம் எழுப்பியதும், கன்னியாகுமரியில் பிரமாண்ட திருவள்ளுவர் சிலை அமைத்ததும் கலைஞர் அவர்களே அகநானூறு, புறநானூறு, பதினொன் கீழ்கணக்கு, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என பல்வேறு சிறப்புகளை கொண்ட தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுக் கொடுத்ததும் அவரே. 

எனவே தமிழ் மொழியின் சிறப்பை உலகுக்கே உணர்த்திய கலைஞரின் பிறந்தநாளான வருகிற ஜுன் 3ம் தேதியை தமிழ் வளர்ச்சி நாளாக அறிவிக்க வேண்டும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com