மயிலாடுதுறையில் காப்பீட்டு கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Mayiladuthurai, எல்.ஐ.சி. பங்கை தனியாருக்கு விற்பதை கண்டித்து மயிலாடுதுறையில் காப்பீட்டு கழக ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காப்பீட்டு கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
காப்பீட்டு கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில் காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்திக்கொண்டு எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க முயற்சி செய்வதை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். செயலாளர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார்.

 அப்போது எல்.ஐ.சி.நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்க முயற்சி செய்யும் போக்கை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் லிகாய் முகவர்கள் சங்க தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் சண்முகம், காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கம், மயிலாடுதுறை கிளை முகவர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com