இந்து சமுதாய ஒருங்கிணைப்பு - பொங்கல் விழா

சீர்காழி தாலுகா கருக்குடியில் இந்து சமுதாய ஒருங்கிணைப்பு & பொங்கல் விழா இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்தது.
இந்து சமுதாய ஒருங்கிணைப்பு பொங்கல் விழா நடந்தது
இந்து சமுதாய ஒருங்கிணைப்பு பொங்கல் விழா நடந்தது
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா, கருக்குடியில் 

வியாழக்கிழமை பொங்கல் பண்டிகை இந்து சமுதாய 

ஒருங்கிணைப்பு விழாவாக கொண்டாடப்பட்டது.

இந்து மக்கள் கட்சி நடத்திய இவ்விழாவில் திருவாவடுதுறை ஆதீன 

கட்டளை விசாரணை திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள் ஆசி 

வழங்கி பொங்கல் பரிசளித்தார். 

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் 

ஜெ.சுவாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சொக்கலிங்கம், மாவட்ட இளைஞரணி தலைவர் தனசேகரன் 

முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக மயிலக்கோயில் பெருநிலக்கிழார் வரதராஜன் கலந்துகொண்டார். கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் பச்சரிசி, வெல்லம், கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, தேங்காய்.

வாழைப்பழம், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய், சூடம், 

சாம்பிராணி, பத்தி, விபூதி, குங்குமம் அடங்கிய பொங்கல் பரிசு 

பைகள் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் கிராம 

நாட்டாமை, பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com