கலெக்டர் அலுவலகத்தில் மீனவ குடும்பத்தினர் தர்ணா

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் மீனவ குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ குடும்பத்தினர்கள்.
கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மீனவ குடும்பத்தினர்கள்.
Published on

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா பூம்புகார் மீனவர் காலனியைச் சேர்ந்த சுகந்தன், கலைமாறன், சந்தோஷ், பிரதிப்குமார், பார்த்திபன் உள்ளிட்ட 9 குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 25 -க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்அப்போது கருணை கொலை செய்யு மாறு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

பூம்புகார் மீனவர் கிராமத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி மீனவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினர் பூம்புகார் போலீசில் புகார் செய்திருந்தனர்.

இதில் எதிர்தரப்பைச் சேர்ந்த தமிழ்வாணன் என்பவர் இறந்ததால் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. ஆனால் பிரச்சினை நடந்து 15 நாட்களுக்கு பிறகு தமிழ்வாணன் கொரோனா தொற்றால் இறந்துள்ளார். 

ஆனால் தங்களை பழிவாங்கும் நோக்குடன் கொலை வழக்கு போடப்பட்டதால், சிறையிலிருந்து ஜாமீனில் வெளி வந்துள்ளதாகவும், பூம்புகார் மீனவ பஞ்சாய த்தார் தங்கள் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து, மீனவ கிராமத்தில் உள்ள நபர்கள் யாரும் தங்களிடம் பேசக்கூடாது, ரூ.40 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். இல்லை என்றால் தங்களை ஊரை விட்டு விரட்டி விடுவோம் என்று மிரட்டி வருகின்றனர்.

இதுகுறித்துஉரிய விசாரணை செய்து நடவடி க்கை எடுக்கப்படாத நிலையில் தர்ணா போரா ட்டத்தில் ஈடுப ட்டோம் என்றனர். 

இதையடுத்து கலெக்ட ரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதைத்தொ டர்ந்து, மனுவின் மீது உரிய நடவடிக்கைஎடுக்க ப்படும் எனக்கூறி அவர்களை போலீசார் அப்புற ப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com